ஜிப்மரில் இன்று முதல் மருத்துவ கவுன்சிலிங் தொடங்கியது , மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜிப்மரில் இன்று முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கப்பட்டுள்ளது . ஜிப்மர் மருத்துவ படிப்பிற்க்கான 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 1லட்சத்து 89ஆயிரத்து 663 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் .
ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டு தோறும் கலந்தாய்வு நடத்துகின்றனர். அக்கலந்தாய்வில் இதே போன்று எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கமாகும் .
ஜிப்மர் தனது மாணவர்களை நுழைவு தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கின்றது. ஜிப்மரில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நுழைவு தேர்வானது ஜூன் 7 ஆம் தேதி நடத்தப்பட்டது . காலை, மாலை இருவேளை நடந்த தேர்வில் காலையில் 83ஆயிரத்து 720 மாணவர்களும் மாலையில் 1லட்சத்து 5943 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள் . ஜிபமரின் மருத்துவ படிப்புகளுக்கான நாடுமுழுவதும் 79 நகரங்களில் 399 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது . இதனை தொடர்ந்து இன்று கவுன்சிலிங் நடத்தப்படுகிறது . இன்று தொடங்கும் கவுன்சிலிங் ஜூன் 30 வரை நடைபெறும்
சார்ந்த தகவலகள்:
மெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன