டெல்லி: எம்.எஸ்சி படிப்பு பயில்வதற்கு மெட்ராஸ் ஐஐடி விண்ணப்பங்களை அழைக்கிறது. மெட்ராஸ் ஐஐடி-யில் எம்.எஸ்சி படிப்பு பயில ஜேஏஎம் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து ஜேஏஎம் மூலம் சேர்க்கையை நடத்த மெட்ராஸ் ஐஐடி திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஜேஏஎம் மூலம் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப மெட்ராஸ் ஐஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த படிப்பு பயில ஆன்-லைனில் விண்ணப்பங்களை ஏப்ரல் 27-ம் தேதி வரை செலுத்தலாம். இதற்காக JOAPS என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தவேண்டும்.

சேர்க்கை பெற விரும்புவோர் பட்டப்படிப்புக்கான அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் பிறப்புச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டின் முதல் பக்கம் அல்லது பள்ளி, கல்லூரியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது நேஷனாலிட்டி சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் தங்களது ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://jam.iitm.ac.in/jam2016/ என்ற இணையதளத்தை அணுகலாம்.


Click it and Unblock the Notifications












