சென்னை: ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் 4 ஆயிரம் காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை பிரிவுக்கு 3 ஆயிரம் போலீஸாரும், மற்ற துறைக்கு 1000 போலீஸாரும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்கலாம்.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.jkpolice.gov.in-ல் தொடர்புகொள்ளலாம்.