சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கியான சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
நாட்டிலுள்ள மிகப் பழமையான வங்கிகளில் சிண்டிகேட் வங்கியும் ஒன்று. வர்த்தக வங்கியாக இருந்த சிண்டிகேட் 1969-ல்தேசியமயமாக்கப்பட்டது.
தற்போது இந்த வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரிகளை நியமிக்கவுள்ளனர்.
மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீஸஸ், நிட்டே எஜுகேஷன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றில் பேங்க்கிங் அண்ட் ஃபைனான்ஸ் பி.ஜி. டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 20 முதல் 28-க்குள் இருக்கவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் இந்த வேலையிடங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும்.
விண்ணப்பித்தவர்கள் தங்களது கால் லெட்டரை ஜனவரி 21-ம் தேதிமுதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதற்கான ஆன்-லைன் தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது.
மேலும் விவரங்களுக்கு http://www.syndicatebank.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.