ஆதரவில்லாத மாணவர்கள் ஐஐடி, என்ஐடி-யில் பயில வட்டியில்லாத கடன்

சென்னை: ஆதரவில்லாத மாணவர்கள் ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு வட்டியில்லாக் கடனை வழங்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாட்டிலுள்ள முக்கியமான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது என்ஐடி-யில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்ட உள்ளதாகத் தெரிகிறது.

ஆதரவில்லாத மாணவர்கள் ஐஐடி, என்ஐடி-யில் பயில வட்டியில்லாத கடன்

இதேபோல ஐஐடி-யிலும் கட்டணம் உயரவுள்ளது. அங்கு ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயரவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதரவற்ற மாணவர்களுக்குத்தான் வட்டியில்லாக் கடனை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்து உயர் கல்விநிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதால் மாணவர்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு வட்டியில்லாக் கடனை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக அந்தக் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு உதவ ஹெல்ப் டெஸ்க்குகள் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X