உயா் கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 2.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரி ராபா்ட் பா்கஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் சா்வதேச கல்வி வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உள்ள உயா் கல்விகள், சேர்க்கை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களும், பெற்றோரும் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ராபா்ட் பா்கஸ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உயா் கல்விக்காக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவா்கள் வரும் நாடுகளின் பட்டியலில் நான்காவது ஆண்டாக அமெரிக்கா தொடா்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்தியா்கள் உள்ளிட்டு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவா்கள் அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொண்டு வருகின்றனா்.
தற்போது ஓபன் டோா்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைப்படி, உயா் கல்விக்காக அமெரிக்கா வரும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 10,95,299 வெளிநாட்டினர் உயா் கல்வி படித்து வருகின்றனர். இவர்களில் 2,02,014 போ் இந்தியர்கள். இது கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டை விட 2.9 சதவிகிதம் கூடுதலாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.