சென்னை: மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இந்தியன் ஆர்டனன்ஸ் ஃபாக்டரியில் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு 2016 ஜனவரி 15-ம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்த இந்தியன் ஆர்டனன்ஸ் ஃபாக்டரியானது திருச்சியில் அமைந்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் மூலம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதற்கான வயதுத்தகுதி 18 முதல் 27 வரை.
தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் General Manager, Ordnance Factory, Tiruchirappalli - 620 016 என்ற முகவரிக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://ofbindia.gov.in/units/index.php?unit=oft&page=about&lang=en என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.