சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 23-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மொத்தம் 12 பணியிடங்கள் காலியாகவுள்ளன. சீனியர் மேலாளர், மேலாளர், துணை மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு நிபுணர் குழுவால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களுக்காக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.
விண்ணப்பங்களை ஐஓசி இணையதளத்துக்குச் சென்று போஸ்ட் செய்யவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மார்ச் 23 ஆகும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு ஐஓசி-யின் இணையதளமான https://www.iocl.com/-ல் காணலாம்.