நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா உருவெடுத்துள்ள நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவத்திற்கான தேர்வுகளையும், நேர்காணல் அனைத்தையும் ஒத்தி வைத்து இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனிடையே, தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவ வீரர்களுக்கான SSB தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் SSB தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வு எப்போது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படும்.
இதே போல ரிசர்வ் வங்கி பணிகளுக்கான தேர்வுகள், டெல்லி சர்வீஸ் தேர்வுகள், இந்தோ திபெத்தியன் பாதுகாப்புப்படை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.