மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் குழறுபடிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் மாணவர்கள் .
மருத்துவ படிப்புகளுக்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்கள் பிறந்த ஆண்டு பூர்த்திசெய்வது மற்றும் ஓம்எம் ஆர் பத்தி பூர்த்தி செய்வது போன்ற பகுதிகளை பூர்த்தி செய்வதில் சிரமத்திற்குள்ளானார்கள் . தமிழகத்தில் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பை சோதனைகளமாக கண்டனர் ஒருவழியாக நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று செல்லும் நிலையில் மற்றொரு சிக்கல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் சரியான நிலையில் இல்லையென மாணவர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வின் காரணமாக 85% வீதம் இடம் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இது மாணவர்களை திருப்தி படுத்தினாலும் , உடனடி நிதிமன்ற நீட் உத்தரவு தமிழக அரசையும் திக்குமுக்காட செய்தது உண்மை அதன்பொருட்டு அரசு வரும் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றியுள்ளது. அத்துடன் அரசு தொடர்ந்து மத்திய அரசை நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும் .
சார்ந்த தகவல்கள் :


Click it and Unblock the Notifications












