பாடங்களை படிக்க மாணவர்களுக்கு இமேஜ் பேங்க் உருவாக்கப்படும் பாடத்திட்டங்களை பள்ளிகளில் உருவாக்கப்படும் . பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க அமைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்த எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த குழுவின் கூட்டம் ஏற்கனவே ஜூலை 15 ஆம் நாள் நடைபெற்றது .
நேற்று மீண்டும் நடைபெற்ற குழுவின் 2வது கூட்டம் மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆலோசனைகள் புதிதாக பெறப்பட்டன அத்துடன் புதிய பாடத்திட்டம் குறித்து ஆலோசணைகளுடன் மாணவர்களின் விருப்பங்களுரிய வகையில் மாற்றம் கொண்டுவர பேசப்பட்டது. பள்ளிகளுக்கு கல்லுரிகளின் தர அளவீடு குழு நாக் அமைப்பு போல் உருவாக்கப்படும் .
குழுவின் தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் பள்ளிகளில் இமேஜ் அமைக்கப்படும்,மாணவர்களை படிக்க வைக்க ஆர்வமூட்டும் புதியமுறைகள் புகுத்தப்படும் என்று கூறினார் . அத்துடன் புதிய பாடத்திட்டம் உருவாக்க்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கருத்துகள் கேட்கப்படும் என்றார் . அத்துடன் மாணவர்கள் தங்களது பாடங்களை படிக்கும்போது குறிப்பிட்ட பாடங்களை படிக்க மாணவர்களுக்கு இமேஜ் பேங்க் எனப்படும் படக்காட்சிகள் பாடமாக அளிக்கப்படும் .
மாணவர்களை குறிப்பிட்ட பாடங்களை அறிந்துகொள்ள செய்ய உதவிகரமாக இருக்கும் .அதன் பொருட்டு 9 ஆம் நாள் மதுரை, கோவை 11 ஆம் நாள் ,சென்னை 22 ஆம் நாள் தஞ்சாவூர் 24 ஆம் நாள் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மாணவர்கள் தங்கள் உயர்க்கல்வியை தேர்ந்தெடுக்க ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் தொடர்பாக குழு கூட்டத்தில் பேசப்பட்டது . மேலும் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சூழல் படிப்பு முற்றிலும் மாறுபட்டிருக்கும் . மாணவர்களின் கல்வி கற்கும் போக்கு வேறுபடும் .
சார்ந்த பதிவுகள் :
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்?
பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட்டை பெறலாம்!!
தமிழக பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அமைச்சர்கள் ஆலோசனை