காரக்பூர்: குப்பை சேகரிக்கும் பணியில் ஐஐடி மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா....ஆனால் இங்கல்ல. காரக்பூரில்.
காரக்பூர் ஐஐடி-யில் படித்துவிட்டு குப்பை சேகரிப்புப் பணியைத் தொடங்கியுள்ளனர் இந்த மாணவர்கள். இந்தத் திட்டத்துக்கு கபாடி ஆன் கால் என்று பெயர் வைத்துள்ளனர். இதற்காக குப்பை சேகரிப்பு லாரி ஒன்றையும் அவர்கள் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து காரக்பூர் ஐஐடியில் பி.எச்டி படித்து வரும் மாணவர் அபிமன்யு கர் கூறியதாவது: வீடுகளில் வீணாகும் குப்பைகளை சேகரிக்க ஒரு லாரியை வாங்கியுள்ளோம். ஐஐடி படித்த எங்களது நண்பர்களுடன் இணைந்து இந்த கபாடி ஆன் கால் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
மேலும் குப்பை சேகரிக்க தொழிலாளர்களையும் நாங்கள் வேலைக்கு நியமித்துள்ளோம்.
பல்வேறு விதமான குப்பைகளை தரம்பிரிக்கிறோம். பின்னர் டிஜிட்டல் எடைமேடையில் அதை எடைபோட்டு அதற்கு விலையும் கொடுக்கிறோம். சமூக நலன் சார்ந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். லாப நோக்கத்துக்காக அல்ல என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












