சென்னை: ரயிலில் வெய்ட்டிங் லிஸ்ட் பிரச்னையில் சிக்கி உள்ளவர்களுக்கு பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஐஐடி மாணவரின் புதிய செல்போன் ஆப். இந்த ஆப்-க்கு 'Ticket Jugaad' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்-ஐ ஐஐடி காரக்பூரைச் சேர்ந்த ருனால் ஜாஜு உருவாக்கியுள்ளார். அவருக்கு உதவியாக அவரது உறவினர் ஷுபம் பால்தவா இருந்துள்ளா். இவர் ஜாம்ஷெட்பூர் என்ஐடி-யில் படித்தவர்.

இந்த புதிய ஆப் குறித்து ருனால் ஜாஜு கூறியதாவது: சாதாரணமாக ரயில்களில் டிக்கெட் புக் செய்யும்போது வெய்ட்டிங் லிஸ்ட்டில் காண்பிக்கும். ஆனால் அதற்கு முந்தைய ஸ்டேஷனிலிருந்து டிக்கெட்டை புக் செய்யும்போது கன்பர்ம் டிக்கெட்டாக இருக்கும்.
ஆனால் இந்த ஆப் ஆட்டோமேட்டிக்காக தேர்வுசெய்து கன்பர்ம் டிக்கெட்டாக தரும். அதுதான் எங்களது வெற்றி என்றார் அவர். ஐஐடியில் உள்ள தொழில்முனைவோர் மையம் இந்த ஆப்-ஐ ருனால் ஜாஜ் தயாரிக்க உதவியது. இதற்காக இவருக்கு ரூ.1.5 லட்சம் பரிசை காரக்பூர் ஐஐடி வழங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற குளோபல் பிஸினல் மாடல் போட்டியில் இந்த பரிசு ருனாலுக்கு வழங்கப்பட்டது.
வெய்ட்டிங் லிஸ்ட்டில் டிக்கெட் இருக்கும்போது ஆட்டோமேட்டிக்காக ஸ்டேஷன்களைத் தேர்வு செய்து கன்பர்ம் டிக்கெட்டாக வழங்கி விடுகிறது இந்த ஆப்.


Click it and Unblock the Notifications












