டெல்லி: ஹிமாசலப் பிரதேசத்தின் ஜிலு ஜிலு நகரமான மண்டியில் அமைந்துள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
அப்ளைட் மேத்ஸ் பிரிவில் எம்.எஸ்சி படிப்புகளுக்கு இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. பி.எஸ்சி கணிதம் படித்தவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 55 சதவீத மதிப்பெண்களுடன் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதுமானது.

இந்தப் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். மாணவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்கலை ஜூன் 17-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். போட்டித் தேர்வுக்கு செய்யப்படும் மாணவர்கள் ஜூன் 21-ம் தேதி அறிவிக்கப்படுவர்.
இந்த சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு http://www.iitmandi.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












