சென்னை: மெட்ராஸ் ஐஐடி-யில் உதவித்தொகை வசதியுடன் பிஎச்.டி., எம்.எஸ். படிப்புகளை படிப்பதற்கான அருமையான சந்தர்ப்பம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
2016-ம் கல்வியாண்டில் தொடங்கவுள்ள படிப்புகளுக்கான உதவித்தொகைத் திட்டமாகும் இது.
மெட்ராஸ் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி அவர்கள் உதவித்தொகையைப் பெற வேண்டுமானால் அவர்கள் பி.இ., பி.டெக், எம்.எஸ்சி படிபப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
மேலும் கேட், நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் முதல் 2 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து 3-வது ஆண்டு வரை மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதேபோல எம்.எஸ். படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
எம்.எஸ். படிப்பில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்புபவர்கள் கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் அவர்களது படிப்புத் தேர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.iitm.ac.in என்ற மெட்ராஸ் ஐஐடி-யின் இணையதளத்தைக் காணலாம்.