பெங்களூரு: ஜூலை மாதம் முதல் தார்வாட் நகரில் அமைந்துள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனம் செயல்படவுள்ளது.
தொடக்கத்தில் இங்கு 3 படிப்புகள் இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளுடன் ஐஐடி செயல்படத் தொடங்கும்.

தற்போது ஐஐடி-க்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதுவரை இந்த ஐஐடி வாட்டர் அண்ட் லேண்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் (டபிள்யூஏஎல்எம்ஐ) வளாகத்தில் செயல்படும்.
புதிய ஐஐடிக்காக 3 ஆய்வகங்களைத் தர தார்வாட் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தார்வாட் ஐஐடி-க்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறு பம்பாய் ஐஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக பம்பாய் ஐஐடி-யிலிருந்து 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சிவப்பிரசாத் தலைமையிலான குழு இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளது. இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழனும் இடம்பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications












