மும்பை: வெடிபொருட்கள், பயங்கரவாதப் பொருட்களைக் கண்டறிய உதவும் இ-நோஸ் என்ற கருவியை கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர் ஐஐடி பம்பாய் மாணவர்கள்.
வெடிபொருட்கள், வெடிகுண்டுகளைக் கண்டறிய தற்போது மோப்ப நாய்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பம்பாய் ஐஐடி மாணவர்கள் இந்தப் பொருட்களைக் கண்டறிய உதவும் கையடக்கமான எலக்ட்ரானிக் நோஸ் எனப்படும் இ-நோஸ்-ஐக் கண்டறிந்துள்ளனர்.
இதன்மூலம் வெடிபொருட்களை எளிதில் கண்டறிந்துவிட முடியும். நேனோ தொழில்நுட்பத்துடன் உதவியுடன் இந்த இ-நோஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஐஐடி-யைச் சேர்ந்த 15 மாணவர்கள், 5 பேராசிரியர்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுலகக நிதியுதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இ-நோஸ் கருவியை ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன்ற கருவிகளில் இதை இணைந்து தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கமுடியும்.
இதுகுறித்து ஐஐடி பம்பாய் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ் பேசியதாவது: ஆர்டிஎஸ், இஎன்டி போன்ற வெடிப்பொருட்களை இந்தக் கருவி எளிதில் கண்டறிந்துவிடும். இது சிறப்பாக செயல்பட்டு அனைத்துவிதமான வெடிபொருட்களையும் கண்டறியும். மனித மூக்கு அல்லது நாய்களின் மூக்கு போலவே இது செயல்பட்டு மோப்பம் பிடிக்கும் என்றார் அவர்.