சென்னை: பெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு பெருமைக்குரிய விருது கிடைத்துள்ளது.
இந்த மாணவர்கள் புதுமாதிரியான ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர். ஹெலிகாப்டரின் ஃபேனிலிருந்து மின்சக்தியைப் பெறும் வகையில் அந்த ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர் என்பதுதான் அதன் சிறப்பு. இந்த ஹெலிகாப்டர் டிசைன், அமெரிக்கன் ஹெலிகாப்டர் சொசைட்டி இன்டர்நேஷனல் நடத்திய மாணவர் வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்று விருதைத் தட்டிச் சென்றுள்ளது.
ஐஐஎஸ்சி-யைச் சேர்ந்த 4 மாணவர்கள் அரும்பாடுபட்டு இந்த டிசைனை உருவாக்கியுள்ளனர்.
சிறிய ரக ஹெலிகாப்டரான இது தனது ஃபேன்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும். மேலும் நகர்ப்புறத்தில் 10 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் சென்று டெலிவரி செய்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மற்றொரு டிசைனையும் அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
ஐஐஎஸ்சி-யைச் சேர்ந்த லக்ஷயா என்று அணியினர்(ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறை) இதை உருவாக்கியுள்ளனர்.