நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமான ஏற்கனவே மாநில பாடத்திட்டத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கான பொதுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் தற்போது பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது கொரோனா உயிர்க்கொல்லி கிருமி. தற்போது, இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அரசாங்கம் சார்பில் இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டு சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கான பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.