அமெரிக்கா தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் (IBM), தனது ஊழியர்களைப் பெருமளவில் பணி நீக்கம் செய்யவுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஐபிஎம் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் பெரும் பங்குடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனாவினால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் பெருத்த அடிவாங்கியுள்ளது. இதில், ஐபிஎம் நிறுவனமும் தப்பவில்லை.
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாலிக்கும் வகையில் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் பணிநீக்க முடிவுக்கு வந்துள்ளது ஐபிஎம் நிறுவனம்.
குறிப்பாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், ஐபிஎம் நிறுவனத்தில் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெனிசில்வேனியா, கலிபோர்னியா, மிச்சூரி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎம் ஊழியர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இன்னும் எத்தனை பேரை பணிநீக்கம் செய்யும் என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை.
ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா பொறுப்பேற்ற பிறகு இந்நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












