சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) போன்று நான் பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரிச்சர்ட் ஆர். வர்மா தெரிவித்தார்.
வருகை
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்துக்கு ரிச்சர்ட் ஆர். வர்மா சமீபத்தில் வருகை தந்தார்.
கேஐஐடி
கேஐஎஸ்எஸ், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) மாணவர்களுடன் அவர் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
அச்சுதா சமந்தா
அமெரிக்கத் தூதரை, கேஐஎஸ்எஸ் நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா வரவேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் ரிச்சர்ட் ஆர். வர்மா பேசியதாவது:
25 ஆயிரம் குழந்தைகள்
ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் பயில்வது வியப்பாக இருக்கிறது.
70 நாடுகள்
கேஐஎஸ்எஸ் போன்ற இன்ஸ்டிடியூட்டை நான் பார்த்ததே இல்லை. நான் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். இதுபோன்ற இன்ஸ்டிடியூட்டை நான் பார்த்ததே இல்லை.
ஆசிரியப் பணி
எனது தாய், தந்தையர், எனது தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனது தாய், தந்தை, பாட்டி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தவர்கள். ஆசிரியப் பணி உன்னதமான பணியாகும்.
அமெரிக்கத் தூதர்
நான் இங்கு இன்று அமெரிக்கத் தூதராக நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனது தாய், தந்தையர்.
வசதி வாய்ப்பு
கேஐஎஸ்எஸ் போன்ற இன்ஸ்டிடியூட்டில் நீங்கள் பயில்வது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம். உங்களுக்கு அருமையான வசதி, வாய்ப்புகளை செய்து தந்துள்ளார் டாக்டர் அச்சுதா சமந்தா. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.