உயர் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் நாடு முழுவதும் 6709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடுமுழுவதும் டிஎம் , எம்சிஎச் ஆகிய படிப்புகளுக்கு 1215 இடங்கள் உள்ளன.
அவற்றில் நாடு முழுவதும் உயர் படிப்புகள் இளநிலை முதுநிலை போன்று மாணவர்கள் படிக்கும் மருத்துவ உயர் படிப்புகள் நீட் தேர்வு முறையில் மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். தமிழகத்திற்கு 192 இடங்கள் உள்ளன.
ஜூன் 10, 11 ஆம் தேதி வரை தேர்வுகளில் நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் 50ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள் தமிழகத்தில் மட்டும் அரசு டாக்டர்கள் 1200 பேர் உட்பட மொத்தம் 2500 பேர் தேர்வு எழுதினார்கள் .
இத்தேர்வு முடிவு சமிபத்தில் வெளியானது . மொத்தம் எழுதியவர்கள் 50 ஆயிரம் பேரில் 6709 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பொது மருத்துவ பிரிவு 2294 பேர் மற்றும் பொது அறிவை சிகிச்சை பிரிவில் 2345 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இவர்களுக்கு கலந்தாய்வு அந்தந்த மாநிலங்களில் நடைபெற்று வந்தது ஆனால் இந்த வருடம் மத்திய அரசே அவற்றை நடத்துகிறது. கலந்தாய்வு குறித்த விவரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை நடைமுறை ஆகியவற்றை அறிந்துகொள்ள www.mcc.nic.in மற்றும் www.mohfw.nic.in என்ற இணையத்தளங்களை தொடர்ந்து கண்காணித்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவலை பெற உதவிகரமாக இருக்கும்
சார்ந்த படிப்புகள் :
தமிழக அரசின் மருத்துவ படிப்புகளுக்கான 85% சதவிகித இடஒதுக்கீடு இரத்து
மருத்துவம் , வேளாண்மை, பொறியியல் கவுன்சிலிங்கள் நீட் தேர்வுக்குப்பின் ஸ்தம்பிப்பு