சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கொட்டு பள்ளிகளின் தரம்ற்ற நிலைக்கு பதில் அளிக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட பந்தளூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிகல்வி பயில அனுமதி மறுத்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்க பட்டுள்ளது . அரசு பள்ளியில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி பயில கடந்தாண்டு ஜூலை அனுமதி வழங்கியது ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பது நியாயமில்லை ஆகையால் அதுகுறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது . இது குறித்து விசாரித்த நீதிபதி கிருபாகரன் மிகுந்த வருத்தம் தெரிவித்தார் .
அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியிலே பயில வேண்டும் என அரசு ஏன் கட்டாயப்படுத்தவில்லை. மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ் வழி பயிலும் மாணவர்களுடன் அமர்ந்து தமிழ்வழி ஆசிரியகளிடம் கல்வி கற்க்கின்றனர் அதில் எவ்வாறு வேறுபாடு காணபது . மற்றும் அரசு பள்ளிகளிள் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வந்து வகுப்பு நடத்துவதில்லை. கிராமத்து நடுநிலைப் பள்ளிகளின் நிலைமை இன்னும் மோசம் ஆதலால் நகரத்துபள்ளிகளுக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர் . மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பகுதிநேர வேலையில் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த தவறுகின்றனர்.
ஆசிரியர்கள் சரியான நேரத்தில் முறைப்படி வகுப்பெடுத்தால்தான் இந்த தேசத்து மாணவர்கள் உருப்படுவார்கள் என கடிந்துகொண்டார் . அத்துடன் அரசுக்கு இது குறித்து ஜூலை 14க்குள் 20 கேள்விகளுக்கு விடையளிக்குமாறு அரசுக்கு நோட்டிஸ் அனுப்பபட்டுள்ளது . அதன்படி காலதாமதமாக பள்ளிக்க்கு வரும் ஆசிரியரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை எவ்வளவு .
பகுதி நேர தொழில் செய்யும் ஆசிரியர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன உள்ளிட்ட கேள்விகளுடன் விடையளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்க தமிழ்க அரசு பதிலளிக்க வேண்டும் .
சார்ந்த தகவலகள் :
தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு " />அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி,தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கௌரவம்