பெற்றோர் அற்ற ஏழை மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் இலவசமாக கல்வி வழங்கவுள்ளதாக ராமகிருஷ்ணா மிஷன் அறிவித்துள்ளது.
இது குறித்து ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லச் செயலாளர் சுவாமி சத்யஞானந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ஆண்டுதோறும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 6ம் வகுப்பிலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கணினி) முதலாமாண்டிலும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் கல்வியாண்டிலும் ஆதரவற்ற அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நல்ல மதிப்பெண் பெற்ற தகுதியுடைய மாணவர்களுக்குக் கல்வி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களிக்கப்படும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 044-24990264 அல்லது 044-42107550 எனும் தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இச்செய்தி குறித்துக் கூறி உதவலாமே..