சென்னை: தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன், டெல்லி ஐஐடி, டாடா டிரஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் பொருட்டு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 25 தொழில்முனைவோருக்கு இந்த உதவிகள் செய்யப்படும்.

இதற்காக தெற்காசிய இன்ஸ்டிடியூட்டுக்கு மானியத்தை டாடா டிரஸ்ட் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் நீதி ஆயோக் ஆணையத்தின் தலைவர் தருண் கன்னா கூறியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகள் இந்தியாவில் தேவை. ஆனால் இவ்வளவு குறைந்த காலத்தில் இத்தனை வேலைவாய்ப்பகளை உருவாக்குவது மிகவும் கடினம். எனவே எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
இதுகுறித்து டாடா டிரஸ்ட் செயல் அறங்காவலர் ஆர். வெங்கட்ராமன் கூறியதாவது: ஹார்வர்ட் பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி உதவியுடன் நாஙகள் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டில் போதுமான தொழில்முனைவோர்களை உருவாக்கி அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் எங்களது திட்டம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












