தேசத்தின் வளர்ச்சி துடிப்பு மிக்க ஆசிரியர்கள் கையில் உள்ளது
ஒரு நாட்டின் துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்டுள்ளது எனில்
அங்கு ஆசிரியச் செல்வம் உள்ளது என்று அர்த்தம் !! .
ஆசிரியர்கள் தேசத்தின் துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்குபவர்கள் நாட்டின் ஆற்றல்மிக்க ஆசிரியர்களால்தான தேசம் வளம் பெறும் .
நாட்டு மக்களின் ஒழுங்கு சீர்ப்படுத்தப்பட்ட ஆசிரியர்களின் படைப்பு !! .
எங்கு ஒரு நாடு சீர்மையுடன் உள்ளதோ அங்கு அந்த இளமை வேகம் ததும்பும்!!
வானகம் வையகமும் வளம் குறையா செல்வம் தருகிறதெனில் அங்கு வற்றாத ஆசிரியர் வளம் பெருக்கம் உள்ளது !!
இன்று ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 சர்வப்பள்ளி இராதகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினமான இன்று ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது . இந்தியாவில் ஆசிரியர்தினம் 1962 முதல் கொண்டாடப்படுகிறது . சர்வப்பள்ளி இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை ஆசிரியர்கள் தினமாக கொண்டாட அவர்களது மாணவர்கள் கேட்டுகொண்டதால் ஆசிரியர்தினமாக கொண்டாடப்படுகிறது.
எந்நாளும் நன்றியுடன் என் ஆசிரியர்க்கு
ஆசிரியர்கள் இல்லா நாள் எந்நாளும் இல்லா நாள்
எந்நாளும் நன்றியுடன் என் ஆசிரியர்க்கு
நம்மை நாம் உணரகாரணம் நமது ஆசிரியர்தான்
உறுதியின் படைப்பு
நல்லான் பொல்லான் பாரபட்சமற்றவர் ஆசிரியர்
தன்னம்பிக்கையூற்று ஆசான்
நம்மிடம் இருக்கும் நான் என்ற ஒருமையை விரட்டியடிப்பவர் ஆசான்
நாடு முழுவதும் ஆசிரியர்தின நன்நாளில் முழுக்க முழுக்க மாணவர்கலால் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும் தினம் ,ஆசிரியர்களுக்கு இன்று பூவைத்து , பாத பூஜை செய்து வழிபடும் மாணவர்கள் கொண்டாட்டம், கண்களை பறிக்கும் வண்ணமய அழங்காரத்தில் ஆசிரியர்களை ஆச்சர்யமூட்டும் மாணவர்கள், புதுப்புது போட்டிகளும் வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் மறக்க முடியாத நிகழ்வுகளைதரும் ஆசிரியர்களுக்கும் தரும் இந்நாள், என விரிந்து கொண்டே செல்லும் விழாக்காலம் இதுவாகும். இவ்வண்ணமயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர்தினத்தை கொண்டாடுவோம் .
சார்ந்த பதிவுகள்:
ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்
சாதனைகளின் பிறப்பிடம் ஆசிரியர்களின் கற்றலலிருந்து பெற முடியும்
ஆசிரியர்களின் சிறப்புகள் மற்றும் பொண் மொழிகள்
அறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் !!