சென்னை : தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நுழைவுச் சீட்டு நேற்று (11/04/2017) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பதவிக்கான 6 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான நோட்டிபிகேசன் 28 டிசம்பர் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 27 ஜனவரி 2017ம் தேதி விண்ணபிப்பதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 31 ஜனவரி 2017ம் தேதி விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு கடைசி தேதியாக அறிவிக்க்ப்பட்டது.
15 ஏப்ரல் 2017ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வு நடத்தப்படும். அதில் ஜெனரல் சப்ஜட்டில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். அதில் ஜெனரல் ஸ்டடீஸ், ஜெனரல் தமிழ், ஜெனரல் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஜெயிலர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் www.tnpsc.gov.in ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












