சென்னை: இந்த வருடத்திற்கான குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
துணை வணிக வரி அலுவலர், துணை பதிவாளர் உள்ளிட்ட 1,241 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் மே 29 ஆம் தேதிக்குள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜூன் 1 கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான குரூப் 2 தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகைகள், பணியமர்த்தப்படும் துறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு www.tnpsc.gov.in , www.tnpscexams.net என்ற இணையதள முகவரியில் பார்வையிடவும்.
English summary
TNPSC announced Group two examination for 1,241 postings in government of Tamil Nadu.
Story first published: Friday, May 1, 2015, 12:39 [IST]


Click it and Unblock the Notifications












