நீட்தேர்வை எதிர்கொள்ள தமிழகத்தில் 412 மையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னையில் நீட் தேர்வு உட்பட மத்திய அரசின் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் தயாராக அரசு மையங்களில் இணையதளங்கள் மூலம் மாணவர்கள் பதிவு செய்ய தொடங்குங்கள் . 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணியக் கோரிக்கையில் பயிற்சி மையங்கள் அமைப்பது குறித்து அறிவித்தார்.

வளர்ந்துவரும் கல்விசூழலில் தமிழக மாணவர்களை அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் தயார் செய்வது தொடர்பாக மாணவர்கள் கிராம்ப்புற மாணவர்கள் முதல் அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர்கள் பெரிதும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு மையம் என்கிற அளவில் மொத்தம் 412 மையங்கள் ஏற்ப்படுத்த அரசு அறிவித்துள்ளது.
நீட்தேர்வு தொடர்பான அரசு பயிற்சி மையங்களில் சேர்வதற்கு மாணவர்கள் விரைந்து பதிவு செய்ய வேண்டும் . அத்துடன் செய்யப்படும் பதிவுகள் பள்ளிகளின் மூலமாகவே பதிய வேண்டும் . பள்ளிக்கல்வி தளத்தின் மூலம் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 26க்குள் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும் . மாணவர்கள் தங்கள் பதிவை செய்து தங்களுடைய எதிர்கால கனவை நிறைவு செய்ய சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அதற்கு அரசு பயிற்சிமையத்தில் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும்
நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் இந்தாண்டு மருத்துவ கனவை விடுத்து நின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது . இந்நிலையை அரசு கருத்தில் கொண்டு அரசு பயிற்சி மையங்கள், சிறப்பான தரமான பாடப்புத்தகங்கள் அத்துடன் வினா வங்கி புத்தகம் , இமேஜ் பாடங்கள் அனைத்து விதமான அதிநவின வசதிகளையும் தர அரசு திட்டமிட்டு அறிவித்துள்ளது . அதனை இனிவரும் காலங்களில் அறிமுகப்படுத்தும் அவற்றை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது .
மாணவர்களுக்கு இணைய வசதி, கட்டாய கணிப்பொறி பாடம் போன்ற திட்டங்கள் மாணவர்களை தகுதி வாய்ந்தவர்களாக்கும் முயற்சியாக கருதப்படுகிறது .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












