சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. குழந்தை இலக்கியம் என்று போற்றப்படும் நூல் எது?
அ. பிள்ளைத் தமிழ் ஆ. குற்றாலக் குறவஞ்சி இ. பழமொழி ஈ. பள்ளு
(விடை : பிள்ளைத் தமிழ்)
2. தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாராட்டப்பெறும் நூல் எது?
அ. தொல்காப்பியம் ஆ. திருக்குறள் இ. சிலப்பதிகாரம் ஈ. திருவருட்பா
(விடை : திருக்குறள்)
3. பத்து பருவங்களை குறிக்கும் நூல் எது?
.அ. எட்டுத்தொகை ஆ. பிள்ளைத்தமிழ் இ. பத்துப்பாட்டு ஈ. ஐம்பெருங்காப்பியங்கள்
(விடை : பிள்ளைத்தமிழ்)
4. வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படுபவர் யார்?
அ. திருமங்கையாழ்வார் ஆ. குமரகுருபரர் இ. தாயுமானவர் ஈ. நம்மாழ்வார்
(விடை : நம்மாழ்வார்)
5. புறப்பாட்டு அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
அ. புறநானூறு ஆ. அகநானூறு இ. வளையாபதி ஈ. பரிபாடல்
(விடை : புறநானூறு)
6. சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறியவர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. கணியன் பூங்குன்றனார் இ. ஔவையார் ஈ. பாரதியார்
(விடை : ஔவையார்)
7. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. மங்கையர்க்கரசி ஆ. திலகவதியார் இ. ஔவையார் ஈ. ஆண்டாள்
(விடை : ஆண்டாள்)
8. பாம்பு அறியும் பாம்பின் கால் என்ற தொடர் காணப்படும் நூல் பெயர் கூறுக.
அ. சிறுபஞ்ச மூலம் ஆ. திரிகடுகம் இ. நாலடியார் ஈ. பழமொழி நானூறு
(விடை : பழமொழி நானூறு)
9. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறியவர் யார்?
அ. சேக்கிழார் ஆ. சுந்தரர் இ. அப்பர் ஈ. திருமூலர்
(விடை : திருமூலர்)
10. குட்டி திருக்குறள் என போற்றப்படும் நூல் எது?
அ. நாலடியார் ஆ. ஏலாதி இ. நந்திக் கலம்பகம் ஈ. கலித்தொகை
(விடை : நாலடியார்)