சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியவர் யார்?
அ. சுரதா ஆ. கண்ணதாசன் இ. வண்ணதாசன் ஈ. முடியரசன்
(விடை : சுரதா)
2. குழந்தைச் செல்வம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. திரு.வி.க இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வ.உ. சிதம்பரனார்
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
3. நாட்டுக்கும்மி என்ற தேசபக்திப் பாடல்களை எழுதியவர் யார்?
அ. கவிமணி ஆ. பாரதியார் இ. பாரதிதாசன் ஈ. நாமக்கல் கவிஞர்
(விடை : நாமக்கல் கவிஞர்)
4. மந்திரங்கள் ஓதியது அந்தக் காலம் எந்திரத்தால் மழைவருவது இந்தக் காலம் இது யாருடைய பாடல் வரிகள்?
அ. உடுமலை நாராயண கவி ஆ. பட்டுக்கோட்டையார் இ. மருதகாசி ஈ. கண்ணதாசன்
(விடை : உடுமலை நாராயண கவி)
5. மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யார்?
அ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. திரு.வி.க இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வ.உ.சிதம்பரனார்
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
6. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயரை கூறுக?
அ. சக்கரவர்த்தினி ஆ. வந்தே மாதரம் இ. நவஜீவன் ஈ. நவசக்தி
(விடை : சக்கரவர்த்தினி)
7. பாததியார் பிறந்த மாவட்டம் எது?
அ. தூத்துக்குடி மாவட்டம் ஆ. திருச்சி மாவட்டம் இ. தஞ்சை மாவட்டம் ஈ. திருவாரூர் மாவட்டம்
(விடை : தூத்துக்குடி மாவட்டம்)
8. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
அ. பழையனூர் ஆ. மோகனூர் இ. மாதனூர் ஈ- ஆம்பூர்
(விடை : மோகனூர்)
9. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக முளைத்தது என்று நாமக்கல் கவிஞரைப் போற்றியவர்?
அ. அறிஞர் அண்ணா ஆ. பெரியார் இ. இராஜாஜி ஈ. வ.உ.சி
(விடை : இராஜாஜி)
10. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
அ. இராசகோபாலன் ஆ. முத்தையா இ. அரங்கசாமி ஈ. துரைராசு
(விடை : இராசகோபாலன்)