சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. மரபு பிழைகளை நீக்குக.
அ. மாட்டு கொட்டகையில் கிளி கொஞ்சும் ஆ. மாடு தொழுவத்தில் கிளி கத்தும் இ. மாட்டு தொழுவத்தில் கிளி கதறும் ஈ. மாட்டு தொழுவத்தில் கிளி பேசும்
(விடை : மாட்டு தொழுவத்தில் கிளி பேசும்)
2. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ. எல்லோரும் திருமணத்திற்கு வர வேண்டும் ஆ. சகலரும் திருமணத்திற்கு வர வேண்டும் இ. சகலரும் விவாகத்திற்கு வர வேண்டும். ஈ. எல்லோரும் விவாகத்திற்கு வர வேண்டும்.
(விடை : எல்லோரும் திருமணத்திற்கு வர வேண்டும்)

3. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
.அ. அவன் ஆஸ்தி எனக்கு வேண்டும் ஆ. அவன் மனை எனக்கு வேண்டும் இ. அவன் லேண்ட்ஸ் எனக்கு வேண்டும் ஈ. அவன் சொத்து எனக்கு வேண்டும்.
(விடை : அவன் சொத்து எனக்கு வேண்டும்.)
4. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ. அமரர்கள் திருப்பால் கடலைக் கடைந்தனர் ஆ. அமரர்கள் திருப்பாற் கடலை கடைந்தனர் இ. அமரர்கள் திருப்பாற்க் கடலைக் கடைந்தனர் ஈ. அமரர்க்ள் திருப்பாற் கடலைக் கடைந்தனர்
(விடை : அமரர்க்ள் திருப்பாற் கடலைக் கடைந்தனர்)
5. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.
அ. ரிஜிஸ்டர் போஸ்டில் பாரங்களை அனுப்புக அ. ரிஜிஸ்டர் தபாலில் பாரங்களை அனுப்புக இ. பதிவஞ்சலில் பாரங்களை அனுப்புக ஈ. பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
(விடை : பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக)
6. மரபு பிழைகளை நீக்குக
அ. குதிரை பிளிறும் ஆ. குதிரை குரைக்கும் இ. குதிரை கனைக்கும் ஈ. குதிரை கத்தும்
(விடை : குதிரை கனைக்கும்)
7. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.
அ. உணவு விடுதியில் உணவு உண்ணுவது உடலுக்குக் கேடு ஆ. போஸ்டாபீஸ் எங்குள்ளது? இ. பஸ் ஃபாஷ்டா போவுது ஈ. கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்
(விடை : உணவு விடுதியில் உணவு உண்ணுவது உடலுக்குக் கேடு)
8. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ. சேக்கிழார்ப் பெரியபுராணத்தை இயற்றினார் ஆ. சேகிழார் பெரியபுராணத்தை இயற்றினார் இ. சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார் ஈ. சேக்கிழார்ப் பெரியப்புரானத்தை இயற்றினார்
(விடை : சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார்)
9. வழுஉச் சொற்களை நீக்குக
அ. அடைமழை பெய்தது ஆ. அடைமழை பேஞ்சது இ. அடமழை பெய்தது ஈ. அடமழை பேஞ்சது
(விடை : அடைமழை பெய்தது)
10. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ. பச்சை பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள் ஆ. பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள் கழனி பெண்ணாள் இ. பச்சை பட்டாடை அணிந்து நின்றாள் கழனி பெண்ணாள் ஈ. பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்
(விடை : பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்)


Click it and Unblock the Notifications












