சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. சாந்த் பீபி எந்நாட்டு மன்னர்?
அ. சதாரா ஆ. பிஜப்பூர் இ. கோல்கொண்டா ஈ. அகமது நகர்
(விடை : அகமது நகர்)
2. அசோகர் எந்த ஆண்டில் கலிங்கத்தை வெற்றி கொண்டார்?
அ. கி.பி. 231 ஆ. கி.பி. 127 இ. கி.மு. 261 ஈ. கி.மு. 327
(விடை : கி.மு. 261)
3. இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தது யார்?
அ. கொலம்பஸ் ஆ. அமண்ட்சன் இ. வாஸ்கோடகாமா ஈ. எதுவும் இல்லை
(விடை : வாஸ்கோடகாமா)
4. தின்-ஐ- இல்லாஹி ஒரு தேசிய மதம் என்று பிரகடனப்படுத்தியவர் யார்?
அ. அக்பர் ஆ. பாபர் இ. ஹீமாயூன் ஈ. ஔரங்கசிப்
(விடை : அக்பர்)
5. இந்தியா என்பது எதிலிருந்து பெறப்பட்ட வார்த்தை?
அ. இந்துக்கள் ஆ. ஆரியர்கள் இ. இந்திரன் ஈ. சிந்து நதி
(விடை : சிந்து நதி)
6. எந்த இடத்தில் ஹளேபீடு என்ற உயர்வான கோவில் நிறுவப்பட்டுள்ளது?
அ. சோழர்கள் இடத்தில் ஆ. பாண்டியர்கள் இடத்தில் இ. ஹோய்சலேஸ் ஈ. நாயக்கர்கள் இடத்தில்
(விடை : ஹோய்சலேஸ்)
7. சிந்து சமவெளி நாகரிகம் யாரால் அழிக்கப்பட்டது?
அ. முகலாயர்கள் ஆ. ஆரியர்கள் இ. மங்கோலியர்கள் ஈ. திராவிடர்கள்
(விடை : ஆரியர்கள்)
8. 1498 இல், வாஸ்கோடகாமா எந்த இடத்தில் தரையிறங்கினார்?
அ. டில்லி ஆ. நாலந்தா இ. கல்கத்தா ஈ. கோழிக்கோடு
(விடை : கோழிக்கோடு)
9. குஷான வம்சத்தின் புகழ் பெற்ற ராஜா யார்?
அ. புக்ஸ்யா ஆ. கனிஸ்கா இ. ஹர்ச வர்தனன் ஈ. குவிஸ்கா
(விடை : கனிஸ்கா)
10. யார் பிரஞ்சு புரட்சிக்கு ஊக்கம் கொடுத்தது?
அ. லாக் ஆ. பிளாட்டோ இ. ரூசோ ஈ. ஹெகல்
(விடை : ரூசோ)