சென்னை : வெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனம், ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. மேலும் மார்ச 4ம் தேதி சனிக்கிழமை அன்று ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இலவச கருத்தரங்கம் .
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் வெற்றி ஐ.ஏ,எஸ் நிறுவனம் சென்னையில் இலவச கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்து உள்ளது. இதில் வெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பயின்று தேர்ச்சி பெற்று பணியில் இருப்பவர்களும் ஐ.ஏ.எஸ் தேர்வு முறை பற்றியும் அதற்குத் தயாராகும் முறைப் பற்றியும் விளக்குவார்கள். மேலும் தேர்வினைப் பற்றிய மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு தனித் தனியே பதில் அளிக்கப்படும்.
ஐ.ஏ.எஸ் தேர்விற்கு படிக்க விரும்பும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோரோடு இந்ந இலவசக் கருத்தரங்களில் கலந்து கொள்ளலாம். மேலும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஆசிரியர்களை தனியாக சந்தித்து உரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.
கட்டண சலுகை தேர்வு -
வெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனத்தில் சேர்ந்து படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் அமர்வதற்காக கருத்தரங்களில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு முழுமையான கட்டணச் சலுகைத் தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. இதில் பொது அறிவு மற்றும் கணிதக் கூர்மை போன்ற பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் 50 கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும்.
கருத்தரங்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வதற்காக தொடர்வு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 04426265326 / 9600124042.
கருத்தரங்கு நடைபெறும் நாள் - சனிக்கிழமை 4 மார்ச் 2017
கருத்தரங்கு நடைபெறும் இடம் - வெற்றி ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம்.