சென்னை: ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில் எளிதில் சேர முடியும்.
இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க பொகாரோ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அங்குள்ள ராம்ருத்ரா மேல்நிலைப்பள்ளியில் இலவச வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.
இந்தப் பயிற்சிக்காக 41 மாணவர்கள் தேர்வு செய்யப்படடுள்ளனர். இதுகுறித்து பொகாரோ மாவட்ட ஆட்சியர் ராய் மஹிமாபத் ரே கூறியதாவது: நிபுணர்களின் உதவியோடு இந்த மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். அவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று ஐஐடிகளில் சேரும் மாணவர்களுக்கு புத்தகங்கள், கட்டணத்தையும் நாங்களே செலுத்த முடிவு செய்துள்ளோம். நல்ல உள்ளம் கொண்ட சில பெரிய மனிதர்கள் இதற்கு இசைந்துள்ளனர்.
வாரத்தில் 2 நாள்கள் பயிற்சி நடைபெறும். என்றார் அவர்.