அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% சதவிகிதம் உதவிதொகை பெற வேண்டும் . சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்துகின்றது . அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ சேர்க்கையில் இணைவது மிகக்குறைவாக இருக்கின்றது .

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க விண்ணப்பிக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது . இந்த ஆண்டு நீட் தேர்வு காரணமாக அரசு 5 பள்ளிகளில் இருந்து மட்டும் மருத்துவ படிப்பை தொடர்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான பாடத்திட்டங்கள் வழங்காததால் மாணவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை .
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்விசூழல் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் நகரத்து மாணவர்களுக்கிடையே போட்டி போடும் அளவிற்கு தங்களை தயார்ப்படுத்த தாமதமாகின்றது . நீட்தேர்வை இந்தாண்டுமுதல் கொண்டு வருவதால் இனி அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் முழு ஈடுபாடு காட்ட மாட்டார்கள், நீட் தேர்வுக்கு முன்பே கிராமபுற மாணவர்களின் மருத்துவ படிப்பு குறைவாக இருந்தது . ஆகையால அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .
மருத்துவ படிப்புகளுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு அரசு 50% சதவிகித ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் . இல்லையெனில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கிராம மாணவர்களை காண்பது அறிதாகிவிடும் என்று அரசுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளது .
மத்திய மாநில கல்லுரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50% சதவீகித ஒதுக்கீடு வழங்க வேண்டும் . அரசு பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் இத்தகைய ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களை மருத்துவ படிக்க உத்வேகிக்கும் அத்துடன் அரசுப்பள்ளி பாடத்திட்டங்களை காலத்திற்கேற்றவாறு மாற்ற வேண்டும் மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கேற்றவாறு திருத்தம் கொண்டு வரவேண்டும் என சமுக சமத்துவ மருத்துவ சங்க பொதுசெயலாளர் வலியுறுத்தினார் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












