பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பணிக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . பாலிடெக்னிக் பணிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 16 ஆம் நாள் நடைபெறுகிறது . தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணி இயக்குநரும் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெயகாந்தன் அறிவித்தார் .
பாலிடெகனிக் விரிவுரையாளர் பணி நியமனத்தின் மறு அறிவிப்பின் படி எழுத்துதேர்வானது செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் நடைபெறும் 66 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர் .
தமிழ்நாடு சிறப்பாசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . இசை, ஓவியம், கைவிணை உருவாக்கம், உடற்கல்வி, தையல் பயிற்சி போன்ற சிறப்பாசிரியர்கள் தேர்வு செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள் நடைபெறுகின்றது . 1325 காலிப்பணியிடங்கள் நிரப்ப செப்டம்பர் மாத எழுத்து தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
தமிழக பள்ளிகளின் சிறப்பாசிரியர்களின் தேவையை அரசு தற்பொழு உணர்ந்து தேர்வுக்கு அறிவித்துள்ளது . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது . அவ்வாறே அரசு பாலிடெக்னிக் விரிவுறையாளர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் அடையாளம் கண்டு இடமாற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது .
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறையானது அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனார்கள் . அரசு பாலிடெக்னிக்குகளின் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க இங்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது .
சார்ந்த பதிவுகள்:
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா
இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு