இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் நீடிக்கும் குழப்பத்தால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வினால் இந்த ஆண்டு மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளானார்கள் தமிழக மாணவர்கள். விதிமுறைகளின் படி நீட் தேர்வு முடிந்து மருத்துவம், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடக்க வேண்டியது பல்வேறு யோசனைகள் வழக்குகளுக்குப்பின் நீட் தேர்வு முடிவு நடைபெற்று பின் அதன் தேர்வு முடிவுகள் வெளிவந்தது . அத்தோடு இல்லாமல் நீட்தேர்வு முடிவில் அரசு பள்ளியில் பயின்றோரை விட தனியார் பள்ளியில் பயின்றோர் தேர்ச்சி அதிகரித்தது.

கவுன்சிலிங்:
ஒரு வழியாக இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கிற்கு தயாராகும் வேளையில் மருத்துவ விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பத்தில் சிக்கல்கள் இதனை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் தேதி ஜூலை 14ல் தொடங்குகின்றன. ஜூலை 20ல் தான் இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடங்க முடியும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதிதான் அது முடிவடையும் , ஆகையால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். இந்தாண்டு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங், பிஆர்க் கவுன்சிலிங் சோதனை களமாக மாறியது என்பது மாணவர்களின் குமுரலாக இருக்குகின்றது.

இந்நிலையில் இன்னும் வேளாண் படிப்புகளுக்கான இரண்டாம் கவுன்சிலிங் ஜூலை இரண்டாம் வராம் மூன்றாம் மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின் வைக்க முதல்வரை அனுக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கிற்காக லட்சகணக்கில் மாணவர்கள் காத்துகிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் பொறியியல் கவுன்சிலிங் ஜூன் மாதம் தொடங்கி ஜூலையில் முடியும் ஆனால் இந்த வருடம நீட் அனைத்தையும் கம்பி நீட்ட வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும் .
நீட் தேர்வை குறித்து முன்னேற்பாடு இல்லை அதே சமயம் நீட் தேர்வுக்குப்பின் நடத்த வேண்டிய கவுன்சிலிங்கும் நடத்த முடியவில்லை . இந்த சிக்கலுக்கு அரசும் அதிகாரிகளும் விரைந்து முடிவு தந்து மாணவர்கள் கல்வியாண்டை தொடங்க முடிவு செய்ய வேண்டும் .
சார்ந்த தகவல்கள் :


Click it and Unblock the Notifications












