இன்ஜினியரிங் பொதுகவுன்சிலிங் வரும் 23 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது . இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கான
கவுன்சிலிங் தொடங்க தமிழக அரசு ஆயுதமாகின்றது .

நீட் தேர்வு காரணமாக பல்வேறு வழக்குகள் நடத்தப்பட்டு மருத்துவ கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டு தொடங்கும் வேளையில் மருத்துவ கவுன்சிலிங் தள்ளி போகின்றது. இதனையடுத்து பொறியியல் பாடங்களை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பொறியியல் கவுன்சிலிங்கை உடனடியாக தொடங்க திட்டமிட்டுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங் ஜூலை 23ல் தொடங்க ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கவுன்சிலிங்கில் ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது .
பொறியியல் கவுன்சிலிங்கில் 1லட்சத்து73ஆயிரம் இடங்கள் தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 538 பொறியியல் கல்லுரிகளில் மொத்தம் 2லட்சத்து59ஆயிரத்து 631 மாணவ பயிலும் இடங்கள் அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. அரசு இடங்கள் 1லட்சத்து73ஆயிரத்து இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது. பொறியியல் கலந்தாய்வு வெற்றி கரமாக நடக்கும் என நம்பிக்கையில் மாணவர்கள் காத்திருக்கின்றனர். நீட் தேர்வையடுத்து பல்வேறு வழக்குகள் மருத்துவம் மற்றும் பல படிப்புகள் தொடங்க தாமதமாகின. தமிழக அரசு பள்ளி கல்லுரி படிப்புகளில் ஒவ்வொரு சிக்கலையும் கலைந்து சேர்க்கை நடத்திவருகின்றது.
சார்ந்த தகவல்கள் :


Click it and Unblock the Notifications












