பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார் . அதன்படி பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான தேவைகள் கோரிக்கையாக வைக்கப்பட்டது, அதனையடுத்து விசாரிக்க குழு அமைத்து செயலப்படுத்தப்படும் என்றார் . மேலும் செங்கோட்டை தெரிவித்தாதவது பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த இதுவரை 47 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது எனவும் , மேலும் நீட் தேர்வுலிருந்து தமிழகம் விலக்கு கேட்டு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றார்.
பிளஸ் 1,2 வகுப்பு மாணவர்கள் மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட மாணவர்களுக்கான 54 ஆயிரம் கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்புகளுடன் வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளில் 3000 ஆயிரம் சுமார்ட் வகுப்புகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது அதனை டெண்டர் மூலம் அமைத்து செயல்படுத்தப்படும் .
பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் 7700 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான சம்பளம் மாத முதல் நாளே வழங்கப்படும் அத்துடன் அவர்களின் கோரிக்கையை நிரைவேற்ற குழு அமைத்து விரைந்து செயல்படும் . தமிழக கல்வியை சிபிஎஸ்சி தரத்திற்கு நிகராக தரமானதாக மாற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் . தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து தொடர்ந்து தகவலகள் சேகரித்து அதிமாக வசூலிக்கும் நிறுவனங்களின் மீது உயர்நீதிமன்ற குழுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் . என இவ்வாறு கல்ல்வித்துறை அமைச்சர் தகவல்கள் தெரிவித்தார்.
சார்ந்த தகவல்கள்:
அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கௌரவம்
அரசு பள்ளி ஆசியர்களின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து உயர்நீதிமன்றம் கவலை