பள்ளிகளில் ஆய்வு :
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை செனனை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
கும்பகோணத்தில் நடைபெற்ற தீ விபத்தினால் அப்பாவி குழ்ந்தைகள் பலியான சம்பவத்தின் வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. இதனையடுத்து நடந்த வழக்கினை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆராய உத்தரவிட்டது. இதனையடுத்து அனைத்து நடவடிக்கைளையும் விரைந்து எடுக்க குழு தயராகி வருகின்றது. மாணவர்களின் பாதுக்காப்பையும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதே பணியாகும்.
பள்ளிக்கல்வியுடன் ஒன்றினையும் தேர்வுத்துறை :
பள்ளிக்கல்வியுடன் ஒன்றினையும் தேர்வுத்துறை தற்பொழுது பள்ளிக்கல்வியுடன் ஒன்றினைந்து செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் படிப்படையாக நடந்து வருகின்றது .
தேர்வு துறையானது, பத்து மற்றும் பிளஸ் 2 போன்ற பொது தேர்வுகள் நடத்துதல் எட்டாம் வகுப்பு சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்துதல் போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்தி வந்தது. தேர்வுத்துறையின் கீழ் சென்னை மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட ஏழு அலுவலகங்களில் 300 மையங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
தற்பொழுது பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவது அத்துடன் செய்முறை தேர்வுகள் நடத்தும் வேலையையும் செய்கின்றது. தற்பொழுது நடக்கவிருக்கும் பிளஸ்1 தேர்வை நடத்த இருக்கும் வேலையை செய்வது பள்ளிக்கல்வித்துறைதான். பள்ளிக்கல்வித்துறையே விடைத்தாள் சரிப்பார்பு பணியையும் செய்து வருகின்றது.
சான்றிதழ் சரிப்பார்கும் பணியையும் மாவட்ட முதண்மை கல்வி அலுவல்க்=மே செய்து வருவதால் படிப்படியாக தேர்வித்துறை , மாவட்ட கல்வித்துறையுடன் ஒன்றினைத்து தேர்வுத்துறை இய்ங்குவதற்கான வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் கராத்தே பயிற்சி :
பள்ளிகளில் மாணவிகளுக்கு வீரத்தை ஊட்டவும் உடல் வழுவுக்கும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும் கராத்தே பயிற்சி வாரத்தில் ஒரு முறை அரசு பள்ளிகளுக்கு அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. சென்னையில் மட்டும் 2000 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சிகள் தொடங்கியுள்ளன. மேலும் ஏற்கனவே அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன . மாணவ, மாண்விகளுக்கு நல்லொழுக்கம் அத்துடன் சமுக விரோதிகளிடமிருந்து எவ்வாறு காத்துகொள்ளுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
சார்ந்த பதிவுகள் :
புதிய பாடத்திட்டங்களுக்கான முன்னோட்ட வரையரை வெளியீடு ! கருத்து சொல்லுங்க
புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடிவு பொதுமக்கள் கருத்து கேட்க அரசு தயார்