சென்னை: கல்வித்துறையில் முறைகேடுகளைத் தடுக்க உதவும் வகையில் புதிய மசோதா தயாராகவுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
காங்க்ரா
ஹிமாசலப் பிரதேச மாநிலம் காங்க்ராவிலுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
நியாயமற்ற நடவடிக்கைகள்
கல்வித்துறையில் நியாயமற்ற நடவடிக்கைகள் என்ற பெயரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும்.
மசோதா தயார்
தற்போது இந்த மசோதா தயார் நிலையில் உள்ளது. கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும்பொருட்டு இந்த மசோதா கொண்டு வரப்படுகிறு.
முறைகேடுகள் தடுக்கப்படும்.
குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களில் முறைகேடுகளைத் தடுக்க இது உதவும். மேலும் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக மாணவர்கள், அவர்களது பெற்றோரும் விவரங்களை அறிந்துகொள்ள இந்த மசோதா உதவும்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு இந்த மசோதா குறித்து தகவல் அளிக்கப்படும்.
கட்டண விவரம்
கல்வி நிறுவனங்களின் கட்டண விவரம், வசதி வாய்ப்புகள், அடிப்படைக் கட்டமைப்பு போன்ற விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள இந்த மசோதா உதவும் என்றார் அவர்.