நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில், தேசிய, மாநில கட்சி சார்பில் முன்னிலைப்படுத்தும் வேட்பாளர்களின் கல்வித் தகுதி குறித்து, இன்றைய இளைய தலைமுறையினர் அதீத ஆர்வத்துடன் அறிந்து கொள்ள முற்படுவர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தற்போது நீண்ட அரசியல் அனுபவ அறிவுடன், கல்வி தகுதியும் கொண்டிருக்கும் மாநில முதல்வர்கள் யார், யார், அவர்கள் பெற்றிருக்கும் கல்வித் தகுதிகள் என்ன என்பதை கொஞ்சம் அறிந்து வைத்திருக்கலாம் தானே...
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அந்த மாநில முதல்வர்கள், கவர்னர் இடையே நடக்கும் 'டக் ஆப் வார்' குறித்து தெரியும் நமக்கு, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் குறைந்தப்பட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்கிறார்களா?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 ஆவது பிரிவு, அமைச்சர் மற்றும் முதலமைச்சர் நியமனம் குறித்து விவரிக்கிறது. அதன்படி, ஆளுநருக்கும், மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் குழுவுக்கும் இடையே முதலமைச்சர் இணைப்பு பாலமாக உள்ளார்.

முதலமைச்சர்களை தேர்வு செய்ய, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. நிர்வாக அதிகாரம் பெற்ற முதலமைச்சருக்கு, ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளார்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாக அங்கம் வகிக்கும் முதலமைச்சர்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் வளர்ச்சி, கொள்கைகளை உருவாக்கும் லட்சியங்களை கொண்டிருப்பர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 36 முதலமைச்சர்களின் செயல்பாடுகள் என்ன என்பதை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 167 ஆவது பிரிவு எடுத்துரைக்கிறது.
அதாவது, நிர்வாகம், சட்ட முன்மொழிவுகள் தொடர்பான அமைச்சர்கள் குழுவின் அனைத்து முடிவுகளையும், ஆளுநரிடம் முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஆளுநர் தரப்பில் கோரப்படும் நிர்வாகம் தொடர்பான தகவல்களையும் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பை, முதலமைச்சர் மீது, இந்த சட்டப்பிரிவு முன்னிலைப்படுத்துகிறது. முதலமைச்சராக நியமிக்க, அவர் அந்த மாநிலத்தின் கீழ் அல்லது சட்டசபையில் உறுப்பினராக இருப்பது அவசியம் ஆகும்.
முக்கியத்துவம் பெற்ற பொறுப்பை தாங்கியிருக்கும் மாநில முதலமைச்சர்களின் கல்வித் தகுதி பற்றி, நம்மில் எத்தனை பேருக்கும்
தெரியும்?... அது குறித்து கொஞ்சம் விரிவாக பார்ப்போமா?
ஆந்திர பிரதேசம்
ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி
ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பு. ஹைதராபாத்தில் உள்ள ராம் கோடியில் உள்ள பிரகதி மகாவித்யாலயாவில் பட்டம் மற்றும் பி.ஜி., கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.
அருணாச்சலப் பிரதேசம்
பெமா காண்டு
தவாங்கின் பாம்பாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு. இட்டாநகரில் உள்ள டோன்யி-போலோ வித்யாபவனில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.
டில்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில், வரலாற்றில் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார்.
அசாம்
ஹிமந்தா பிஸ்வா சர்மா
கம்ரூப் அகாடமி பள்ளியில் பள்ளிப்படிப்பு. கவுகாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
பீகார்
நிதிஷ் குமார்
பீகார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
சத்தீஸ்கர்
இம்மாநில முதலமைச்சரின் கல்வித் தகுதி தொடர்பான முழு விவரங்கள் விரைவில் இடம்பெறும்.
டெல்லி
அரவிந்த் கெஜ்ரிவால்
சோனிபட்டில் உள்ள ஹோலி சைல்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பு. காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.,) பி.டெக் படிப்பை முடித்துள்ளார்.
கோவா
பிரமோத் சாவந்த்
கோலாப்பூரில் உள்ள கங்கா எஜுகேஷன் சொசைட்டியின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேதம், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டமும், புனேவில் உள்ள திலக் மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்தில், சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும் முடித்துள்ளார்.
குஜராத்
பூபேந்திரபாய் படேல்
அகமதாபாத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ.
ஹரியானா
மனோகர் லால் கட்டார்
பண்டிட் நெகி ராம் ஷர்மா அரசு கல்லூரியில் மெட்ரிகுலேஷன் (உயர்நிலைப் பள்ளி இறுதி ஆண்டு) முடித்தார். ரோஹ்தக் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தார்.
இமாச்சலப் பிரதேசம்
சுக்விந்தர் சிங் சுகு
சோட்டா சிம்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு. சஞ்சௌலியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் மற்றும் சிறப்பு மையத்தில் பட்டம் பெற்றார்.
ஜம்மு காஷ்மீர் - காலியாக உள்ளது.
ஜார்கண்ட்
ஹேமந்த் சோரன்
பாட்னா உயர்நிலைப் பள்ளியின் இடைநிலை.
கர்நாடகா
சித்தராமையா
பி.எஸ்சி பட்டம் பெற்றவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி., முடித்துள்ளார்.
கேரளா
பினராயி விஜயன்
பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பு மற்றும் அரசு பிரென்னன் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரப் பட்டம் பெற்றார்.
மத்தியப் பிரதேசம்
சிவராஜ் சிங் சௌஹான்
போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தத்துவம் பாடத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.
மகாராஷ்டிரா
ஏக்நாத் ஷிண்டே
தானேவில் உள்ள மங்களா உயர்நிலைப் பள்ளி & ஜூனியர் கல்லூரியில் பள்ளிப்படிப்பு. யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளங்கலை கலைப் பட்டம் பெற்றார்.
மணிப்பூர்
என்.பிரேன் சிங்
மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம். 19 மேகாலயா கான்ராட் சங்மா செயின்ட் கொலம்பா பள்ளியில் பள்ளிப்படிப்பு. வார்டன் ஸ்கூல் ஆஃப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பி.ஏ., தொழில்முனைவோர் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் எம்.பி.ஏ., பைனான்ஸ்.
மிசோரம்
லால்துஹோமா
கவ்சால், சம்பையில் பள்ளிப்படிப்பும், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
நாகாலாந்து
நெய்பியு ரியோ
கோஹிமாவில் உள்ள பாப்டிஸ்ட் ஆங்கிலப் பள்ளி மற்றும் மேற்கு வங்காளத்தின் புருலியாவில் உள்ள சைனிக் பள்ளியில் பள்ளிப்படிப்பும். கோஹிமா கலைக் கல்லூரியில் பட்டமும் பெற்றார்.
ஒடிசா
நவீன் பட்நாயக்
டேராடூனில் உள்ள வெல்ஹாம் ஆண்கள் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பு. டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
புதுச்சேரி
என்.ரங்கசாமி
தாகூர் கலைக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டமும், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பி.எல்., முடித்துள்ளார்.
பஞ்சாப்
பக்வந்த் சிங் மான்
சுனாமில் உள்ள ஷாஹீத் உதம் சிங் அரசு கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படிப்பின் முதலாம் ஆண்டு முடித்தார்.
ராஜஸ்தான் - கல்வி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சிக்கிம்
பிரேம் சிங்
தமாங் டார்ஜிலிங் அரசு கல்லூரியில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார்.
தமிழ்நாடு
மு.க.ஸ்டாலின்
சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு. விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தெலுங்கானா
ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆந்திரா வித்யாலயா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
திரிபுரா
மாணிக் சாஹா
பாட்னா, பிகார் மற்றும் லக்னோவில் உள்ள பல் மருத்துவக் கல்லுாரியில், "வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை" தொடர்பாக, இளங்கலை மற்றும் முதுநிலை பல் மருத்துவம் படிப்பை முடித்துள்ளார்.
உத்தரபிரதேசம்
யோகி ஆதித்யநாத்
உத்தரகாண்டில் உள்ள ஹேம்வதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
உத்தரகாண்ட்
புஷ்கர் சிங் தாமி
லக்னோ பல்கலைக்கழகத்தில், மனித வள மேலாண்மை மற்றும் தொழில் உறவுகளில் பட்டம் பெற்றார்.லக்னோ பல்கலைக்கழகத்தில், எல்.எல்.பி., படிப்பை முடித்தார்.
மேற்கு வங்கம்
மம்தா பானர்ஜி
தேஷ்பந்து சிஷு சிக்ஷாலேயில் இருந்து மேல்நிலைப் பள்ளி. ஜோகமயா தேவி கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வரலாற்றில் முதுகலைப் பட்டம்.
ஸ்ரீ ஷிக்ஷாயதன் கல்லூரியில் கல்வியில் பட்டம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் முடித்தார்.
மனிதர்களின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மனிதனுக்கு கல்வி மிகவும் அவசியம். கல்வி மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.அது மனிதனுக்கும் அறிவு, திறமை, பண்பாடு, நன்நடத்தை போன்றவற்றை தருகிறது. அறியாமையை நீக்கி சிந்தனை திறனை அதிகரித்து, முழு ஆற்றல் உள்ளவனாக மாற்றுகிறது.
மனித வாழ்க்கையை முறைப்படுத்தும் இத்தகைய சக்திவாய்ந்த கருவியான கல்வியை, குடிமக்களுக்கு வழங்குவதோடு, குடிமக்களை வழிநடத்தும் முதல்வர்களும் அடிப்படை கல்வியை கொண்டிருத்தல் அவசியம் என்பதை அனைவரும் அறிவர்.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களால் மக்களை எளிதில் சென்று அடையும் விதத்தில் இருந்தால் கூட, ஒரு சிலருக்கு வாய்ப்பு இருந்தும் கற்க முடியாத நிலை உள்ளது. அத்தகைய நிலையை, மாநிலத்தை ஆளுபவர்கள் அகற்ற, நவீனத்துவத்துக்கு ஏற்ப முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இதற்கு அந்தந்த மாநிலத்தில் ஆளும் முதல்வர்கள், மாறி வரும் மாற்றம், நவீனத்துக்கு ஏற்ப, கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், புதிய, புதிய கல்வி சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை...


Click it and Unblock the Notifications












