11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களுக்கு இன்டர்னல்ஸ் மதிப்பெண் என்னும் அகமதிப்பீடு மமிப்பெண் கிடையாது என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில் 11-ஆம் வகுப்பிற்கும், 2017ம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 11மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின், இந்த விதி மாற்றப்பட்டு 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், 11ம் வகுப்புத் தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதிகளை அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 11ம் வகுப்பு தனித் தேர்வர்கள் செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டும் தேர்வு எழுதலாம்.
குறைந்தபட்ச வயது வரம்பு 15 ஆண்டு 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்வில் 90க்குப் பெறும் மதிப்பெண் 100-க்கு கணக்கிடப்படும்.
11ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் 12-ஆம் வகுப்பு தேவை எழுத அனுமதிக்கப்படுவர்.
ஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்றே பிறகே சான்றிதழ் வழங்கப்படும். அதுவரை மதிப்பெண் பட்டியல் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை அரசுத் தேர்வுத் துறையின் http://www.dge.tn.gov.in/ என்னும் இணையதளத்தில் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.