டெல்லி: ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள டீக்கின் பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களுக்காக ரூ.1.8 கோடி மதிப்புள்ள உதவித்தொகையை வழங்கவுள்ளது.
இந்திய மாணவர்களுக்காக தனது துணைவேந்தர் திறன் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து டீக்கின் பல்கலைக்கழகத்தின் செயல் இயக்குநர் (தெற்காசியா) ரவ்நீத் பாவா கூறியதாவது:
எங்களது பல்கலைக்கழக, கலை, விளையாட்டு, சுகாதாரம், என்ஜினீயரிங், பிஸினஸ் அனாலிடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளை வழங்கி வருகிறோம். தற்போது இந்திய மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ரூ.1.8 கோடி மதிப்பிலான உதவித்தொகையாகும்.
இந்த உதவித்தொகையை இந்திய மாணவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். அவர்கள் கல்வி பயிலும் அவர்கள் பெறும் மதிப்பெண் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்திய மாணவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் அழைத்து வருவதன் அடிப்படையில் இந்த உதவித்தொகைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
இந்த உதவித்தொகைத் திட்டத்தின்மூலம் இந்திய மாணவர்களின் முழு பயிற்றுக் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 10 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு http://www.deakin.edu.au%20 என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.