ஐடிஐ-யில் சேர காலக்கெடுவை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) நடப்புக் கல்வியாண்டில் சேர காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறும் நோக்கில் அரசு பல்வேறு நகரங்களில் ஐடிஐ-களை நடத்தி வருகிறது. மேலும் அரசு உதவி பெறும் ஐடிஐ-கள், சுயநிதி ஐடிஐ-களும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐடிஐ-யில் சேர காலக்கெடுவை நீட்டித்தது தமிழக அரசு

இந்த நிலையில் ஐடிஐ-களில் மாணவர்கள் சேர வசதியாக காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும், சுயநிதி நிலையங்களால் அரசுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களில் சேர கவுன்சிலிங் நடத்தப்ட்டு வருகிறது.

ஐடிஐ-களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 10- ஆம் தேதி வரை பெறப்பட்டன.

மேலும், ஐடிஐ-களில் காலியிடங்களை நிரப்பும் வகையில், ஜூலை 20- ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடிஐ-களில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் வரும் 25- ஆம் தேதியன்று, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவுள்ள கவுன்சிலிங்கில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Deadline has been extended by Tamilnadu Government for joining ITI. students can join ITI`s through counselling which is going to be held in july 25.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+