அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயலின் காரணமாக கடலூா், நாகை மாவட்டங்களில் நாளை (நவம்பர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் கடலூர், பாம்பன் இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (நவம்பர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப் போன்று நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












