அரசு பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது . அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சாரணர் , நாட்டு நலப்பணித்திட்டம் , ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் சுற்றுசூழல் மன்றம் பல்வேறு மன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை ஏற்படுத்தி அனைத்து மாவட்ட பள்ளிகளையும் ஒருங்கிணைக்க மாவட்ட முதண்மை கல்வி கண்காணிப்பாளர்கள் தலைமையில் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
கல்வி செயலர் உதயச்சந்திரன் செய்யும் புதுமையான செயல்களின் மூலம் அரசு பள்ளிகளின் கல்விதரத்தை மேம்படுத்தியுள்ளார் . இதன்படி அந்ததந்த மாவட்டங்களில் உள்ள பழமையான பிராதன சின்னங்கள் பழமையான பொருட்கள் போன்ற பொருட்கள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றை அறிந்து கொள்ளவும் அவற்றை பற்றி அறிவை வளர்க்க உதவும் வகையில் பள்ளிகளில் தொன்மை பொருட்கள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது . அவற்றை செயல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் நாகரீகம் மிகத்தொன்மையானது ஆகும் . சங்கம் தொட்டு தமிழ் ஆவணங்கள் சிறந்து விளங்குகின்றன. ஒலைசுவடிகள், மற்றும் தமிழ் ஆவணங்கள் முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் வரலாற்று ஆவணங்கள் நாடுமுழுவதும் கிடைக்கின்றன. அவற்றை நாம் ஒருங்கிணைத்து பாதுகாக்கும் போது எளிதாக நாம் அவற்றை பற்றிய அறிவு பெறலாம் அத்துடன் நாம் அவற்றை அடுத்த தலைமுறைகள் அறிந்துகொள்ள வழி ஏற்படுத்தலாம்.
சார்ந்த தகவல்கள் :


Click it and Unblock the Notifications












