சென்னை: எல்எல்பி சட்டப் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. எல்எல்பி சட்டப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 200-க்கும் மாணவர்கள் எல்எல்பி படிப்புகளைத் தேர்வு செய்தனர்.
எல்எல்பி சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதற்கான கவுன்சிலிங் நேற்று தொடங்கியுள்ளது. மூன்றாண்டுகள் பயிலும் வகையிலான சட்டப் படிப்பாகும் இது.
செப்டம்பர் 16-ம் தேதி முதல் எல்எல்பி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளான 7 அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.
மொத்தம் 6,188 பேர் இந்த படிப்புக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் பொதுப் பிரிவினர் (ஒ.சி.) 320 பேர் முதல் நாள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும் அதிகமானோர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரியில அனுமதி சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுச் சென்றனர்.
மேலும் முதல்நாளில் திருநங்கை ஒருவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்றார். அவருக்கு அனுமதியும் கிடைத்துவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை வரை கவுன்சிலிங் நடைபெறும் என்றும், வருகிற 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.