இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசுப் பள்ளி, சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜேஇஇ தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தேர்வு தேதிகள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு தேதியோடு இணைந்து வருகிற சிக்கல் ஏற்படும் என்பதாலும், ஜேஇஇ மெயின்ஸ் தேர்வர்கள் பல நகரங்களுக்குப் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அதுவும் தள்ளிவைக்கப்படுகிறது. நிலைமையைச் சீராய்வு செய்த பிறகு புதிய ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு தேதி மார்ச் 31ம் தேதி அல்லது அதற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.